பெண்மையின் வியப்பு



அப்படி என்னதான் உள்ளதோ இந்த பெண்மையில்!!

தினமும் வியக்கிறேன்!!

நீ சிரித்தால்!!

உன் கடைக்கண்னால் என்னை தீண்டும் போதும்!

தவறு என்றால் உன் இதழ் தன்னை கடிப்பதும்!!

காதோரம் உன்  கூந்தலை செல்லமாய் வருடுவதும்!!

நீ சினுங்கிடும் போது உன்னுடன் நடனம் ஆடும் காதோர ஜிமிக்கியும் !

பதட்டத்தில் உன் நகம் தனை கடிக்கும் போதும்!!

உன் கள்ள சிரிப்பில் வெள்ளி முத்துக்கள் தெரியும் போதும்!

சொல்லாத அழகெல்லாம் கூத்தாடும் போதும்!!!

ஷெல்லி எழுதிய கவிதை எல்லாம் உன் இடையோடு கொஞ்சிடும் போதும்!

அடி பெண்ணே என்னதான் உள்ளதோ உன்னிடம்!!

உன்னை காணும் போதெல்லாம் இரு விழி சொருகி இந்த உலகம் தாண்டி பறக்கிறேன்!!!

அச்சோ...என் அருகே வந்து என்னை தீண்டி போகாதே!!

நானும் பறவையாய் மாறி போவேனே!!!

-அஜய் ரிஹான்

கருத்துகள்