சாலைப் பயணம்


எனதல்ல,உனதல்ல,நமதல்ல-சாலையில்
செல்லும் வேளையில் கவனம் தவறினால் !!

உறவுகள் வீட்டில்உன்னை எதிர் நோக்கிக் காத்திருக்க-சோகம்
தன்னை பரிசளிக்க வேகம் கொண்டாயோ ?!!


சாலைக் கற்களில் உறங்கும் தெய்வங்களின் உறங்கும்,விழிக்கும் நேரம் அறிவாயோ ?- உன்னை காத்தருள !!!
நேரம் கூட மௌனமாய் போகும் 'காலம்' 'காலனாய்' மாறினால் !!

பின் வரும் வண்டி எல்லம் உன் உயிர் நண்பணல்ல-நீ
விழுந்தவுடன் ஓடி வந்து தூக்கிவிட !!

சாலையோர பூக்கள் எல்லாம் கண்ணீர் சிந்தும்-நீ
சிந்தும் உதிரம் கண்டு !!

வீசும் காற்றும் உனக்காக மன்றாடி போராடும்-உன்
சுவாசம் நின்றுவிடக்கூடாதென்று அதன் இதயம் துடிக்கும் !!

உன் இதய துடிப்பொலி கேட்டு சாலையில் கிடக்கும் சிறு-சிறு
கற்களில் உறங்கும் தெய்வம் எல்லாம் விழித்தெழுந்து உன் குருதி கொண்டு குடமுழுக்கு செய்துக்கொள்ளாதோ ?!!!

உன் கவனச்சிதறலினால் உன்னை ஆசையாய் சுமந்த வண்டியும்-உன்னை
குறை கூற மனமில்லாமல் வாய்மூடி போனதோ-மயக்கமாய் !!




உன்னைக் காணும் கண்களில் பல வகை அறவாய் !!
அனுதாபமாய் - பல !
மரணம் பற்றிய கவலையோடு - சில !!
உன் கவனக்குறைவை எண்ணிக் கோவமாய் - சில பல!!!

நீ கிளம்பும் போது உன் தாயிட்ட திலகம் யாவும் இரத்தத்தோடு கலந்து காணாமல் போக - உன்னை
எண்ணி ஈன்றெடுத்த வயிற்றில் மெல்லென மின்னல் தாக்க!!

உயிரின் விலை அறிவாயோ நீ ??- உன்னைப்
பெற்றவளை எண்ணிப் பார் பொருள் விளங்கும்

உனக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னில் சரிபாதி - அவளின்
உயிரையும் காற்றில் மிதக்க விட்டுச்செல்லாதே !!

உன் தோளில் சுமந்து விளையாட வேண்டிய மகனின் தோளில் - நீ
சுமையேற்றிச் செல்லாதே !!

உனக்காக வாழும் உன் நண்பணை ஒரு கணம் எண்ணிப் பாராயோ ? -மதி
கெட்டு வேகம் கெள்வாயா ?? நீ !!!

சாலைப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும் அளவான வேகத்தோடு !!



பயணம் சாலையோடு போகட்டும் !
உயிரோடு உடல் வீடு வந்து சேரட்டும் !!

"I think I'm very conscientious of how precious life is and how quickly life can be taken away from you, especially at times when it can be least expected."


-அஜய் ரிஹான்

கருத்துகள்

கருத்துரையிடுக