விழியின் வலிகள்


 உண்மையான காதல் மறுக்கப்படும் வலியும்,

மறக்க முடியாத இதயத்தின் வலியும்...!

உணராத உணர்வை உள்ளம் தாங்குமோ...??

ஆயிரம் மொழிகளில் என் காதல் சொல்லியும் புரியாத அவளுக்கு எங்கே தெரியும் .... ?

கசியும் கண்ணீரும் காதல் சொல்லும் மொழியென்று..!!

விழியில் உறங்கி வலியை மட்டும் தந்து சென்றாளே!! 


கண்ணீர் கசியும் போது கண்களின் வலி இமை அறியுமோ?..!!

வார்த்தைகள் தடுமாறும் போது உதடுகளின் வலி மொழிகளுக்கு புரியுமோ...?!!

மறுத்திடும் உண்மையின் வலி உள்ளம் உணருமோ....?




-அஜய் ரிஹான்  

கருத்துகள்